பல்லவி
1புர ஹர ஜாயே பாலய மாம்
அனுபல்லவி
சர(ணா)ம்பு3ஜ ப4க்திம் தே3ஹி மே
கருணா நிதே4 நிராமயே மாயே (புர)
சரணம்
சரணம் 1
அலி குல வேணி ப4வானி பாவனி
2கல ரவ ம்ரு2து3-தர வாணி ஸ1ர்வாணி
கலி மோசனி பா3லே கமனீய கு3ண-ஸீ1லே
தில(கா)ஞ்சித பா2லே 3த்4ரு2த மணி மாலே (புர)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
புர/ ஹர/ ஜாயே/ பாலய/ மாம்/
புரம்/ எரித்தோனின்/ இல்லாளே/ காப்பாய்/ என்னை/
அனுபல்லவி
சரண/-அம்பு3ஜ/ ப4க்திம்/ தே3ஹி/ மே/
திருவடி/ தாமரையின்/ பக்தியினை/ தருவாய்/ எனக்கு/
கருணா/ நிதே4/ நிராமயே/ மாயே/ (புர)
கருணை/ கடலே/ குறைவற்றவளே/ மாயையே/
சரணம்
சரணம் 1
அலி/ குல/ வேணி/ ப4வானி/ பாவனி/
வண்டு/ மொய்/ குழலியே/ பவானீ/ புனிதையே/
கல/ ரவ/ ம்ரு2து3-தர/ வாணி/ ஸ1ர்வாணி/
குயில்/ கூவலின்/ மென்மை/ குரலியே/ சர்வாணீ/
கலி/ மோசனி/ பா3லே/ கமனீய/ கு3ண-ஸீ1லே/
கலியினின்று/ விடுவிப்பவளே/ பாலையே/ விரும்பத்தக்க/ குணசீலியே/
திலக/-அஞ்சித/ பா2லே/ த்4ரு2த/ மணி/ மாலே/ (புர)
திலகம்/ திகழும்/ நெற்றியினளே/ ஏந்தியவளே (அணிபவளே)/ மணி/ மாலை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - பா4னு கோடி ஸமான - பா4னு கோடி ஸமாப4.
Top
மேற்கோள்கள்
1 - புர ஹர - புரமெரித்தோன் - 'புரம்' என்பது, பொதுவாக, கமலாட்சன், தாரகாட்சன் மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் நிருமித்த பறக்கும் கோட்டைகளைக் குறிக்கும். சிவன் புரமெரித்தல்.
ஆனால் அம்பாளுக்கும் 'திரிபுரா' என்று பெயராகும். ‘திரிபுர ரஹஸ்யம்’ நோக்கவும்.
2 - கல ரவ - குயிலின் கூவல். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளின் பெயர்களிலொன்று - 'கால கண்டி2' (404).
6 - காம பீட2 க3தே - காம பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளின் பெயர்களிலொன்று - 'காம கோடிகா' (589) - காமகோடி பீடம்.
Top
விளக்கம்
3 - த்4ரு2த மணி மாலே - பொதுவாக, 'மணி' என்பது முத்தினைக் குறிக்கும். மணிமாலை, அம்பாள் கைகளில் ஏந்தியுள்ளதாகவோ, அணிந்துள்ளதாகவோ கொள்ளலாம். அம்பாளின், 'பாலா திரிபுரசுந்தரி', 'காயத்ரி' மற்றும் 'சரஸ்வதி' உருவங்களில், அட்சமாலையைக் கையிலேந்தியுள்ளாள்.
5 - நத ஸுத தோஷிணி - பணிந்த மகவினுக்கு மகிழ்வூட்டுபவள். இங்கு, 'மகவு' என்பது, 'விநாயகன்' அல்லது 'முருகனை'யோ அல்லது 'சியாமா சாஸ்த்திரியினை'யோ குறிக்கலாம்.
சர்வாணி - சர்வன் - சிவன் - சிவனின் இல்லாள்.
Top